எதிலும் மத வெறியா? ஆர்.எஸ்.எஸ் கொடியுடன் கோவிலில் பூ கோலம்; 27 பேர் மீது கேரள காவல்துறை வழக்குப் பதிவு

1 Min Read

கொல்லம், செப்.7 கேரளத்தில்  கொண்டாடப்படும் ஓணம் விழாவின்போது, கொல்லம் மாவட்டத்தில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற வாசகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொடியுடன் அத்தப்பூ கோலம் போடப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த 27 பேர் மீது கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஒணத்தின்போது பூக்களால் போடப்படும் அத்தப்பூ கோலம் மிகவும் புகழ் பெற்றது. கொல்லம் மாவட்டம் முத்துப்பிலாக்கிலுள்ள பார்த்தசாரதி கோயிலில் சர்ச்சைக்குரிய வகையில் கோலம் போடப்பட்டதை அறிந்த காவல்துறையினர், அதனை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட்டனர்.

ஆனால், இதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மறுத்ததால், இந்திய தண்டனைச் சட்டத்தின் (BNS) கீழ், 223 (அரசு உத்தரவை மீறுதல்), 192 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படுதல்) மற்றும் 3(5) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் ஓணம் கொண்டாடப்படும்போது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மதவெறியுடன் நடந்து கொண்ட இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் விவாதத்தையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *