பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூத்தோர் நாள் விழா

1 Min Read

ஜெயங்கொண்டம், செப். 7– ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  மூத்தோர் நாள் விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.

மாணவர்களின் தாத்தா-பாட்டிகள் சிறப்பாக அழைக்கப்பட்டு விழாவில் கலந்து கொண் டனர். விழாவிற்கு பள்ளி முதல்வர் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மூத்தோரை மதிக்கும் பண்பும், அவர்கள் வாழ்க்கைப் பயணத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நற்செயல்களும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன.

மாணவர்கள் தாத்தா-பாட்டிகளுக்காக பாடல் கள், நடனங்கள், உரைகள் என பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினர். விழாவின் இறுதியில் மாணவர்கள் தங்கள் தாத்தா-பாட்டிகளுக்கு அன்புடன் வாழ்த்துப் பரிசுகளை வழங்கி, அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரி யர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் மூதாட்டோர் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *