சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 9 பேரை பரிந்துரைத்தது உச்சநீதிமன்ற கொலீஜியம்

1 Min Read

சென்னை, செப்.7   சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 வழக்குரைஞர்கள் மற்றும் 3 மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் பணியிடங்கள் 75. இதில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவுடன் சேர்த்து 52 நீதிபதிகள் பணியில் உள்ளனர். காலியாக உள்ள 23 நீதிபதிகள் பணி யிடங்களை நிரப்பும் வகையில், சென்னை  உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் 18 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கோரி உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு கடந்தாண்டு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள்
ஆர்.ஜான் சத்யன், வி.லட்சுமிநாராயணன், எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, ஆர்.நீலகண்டன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய 6 பேரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் மாவட்ட நீதிபதிகளான பி.வடமலை, ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 3 பேரையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *