முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து – ஜெர்மனி பயணத்தால் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள்!

லண்டன், செப்.7 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமத்துடன் ரூ. 7,500 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இது தமிழ்நாட்டின் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பை கணிசமாக மேம்படுத்தும் முதலமைச்சர் அவர்களின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ. 15,516 கோடி முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான TN RISING அய்ரோப்பா முதலீட்டு சந்திப்புகளின் போது, லண்டனில் இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமம்,மின்சார வாகனங்களுக்கான செல் மற்றும் பேட்டரி உற்பத்தி, BESS (பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு) மற்றும் மின்சார சார்ஜிங் நிலையங்களுக்கான வணிகங்களில்7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பை விரிவுபடுத்தி 1,000–க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மேலும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் (AstraZeneca) இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மூன்றாவது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மய்யத்தை (GITC) 176 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவுள்ளது.

வேலை வாய்ப்புப் பெருகும்!

இதன்மூலம், தொழில் முதலீடு களை ஈர்ப்பதற்கான தமிழ்நாடு முதல மைச்சர்அவர்களின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிநாடுகளுக்கான பயணத்தால் தமிழ்நாடு பெற்ற மொத்த முதலீடு 15,516 கோடி ரூபாயாகும். இதன்மூலம் 17,613 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமத்துடனான புரிந்து ணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இங்கிலாந்து பயணத்தின் மிக முக்கியமான முன்னெடுப் பாகும். இந்தக் குழுமம், தமிழ்நாட்டின் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பில் அதன் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முதலீடுகளை திட்ட மிட்டு, நிலையான இயக்கம் மற்றும் பேட்டரி தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய ஹாட்ஸ் பாட்களில் ஒன்றாக தமிழ்நாட்டை மேம்படுத்துகிறது.

அஸ்ட்ராஜெனெகாவின் GITC, அஸ்ட்ரா ஜெனெகாவின் உலகளாவிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது அதிநவீன ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கு வதில் தொழில்நுட்ப மாற்றத்தை செயல்படுத்துகிறது. இந்நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதன் மூன்றாவது முதலீட்டினை செய்துள்ளது. இது மாநிலத்தின் திறன் வளர்ச்சி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான நிர்வாகத்தின் மீது உள்ள வலுவான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

இந்த முதலீடுகள் இங்கிலாந்தில் முதலமைச்சர் அவர்களின் சந்திப்புகளின் போது வெளியிடப்பட்ட முந்தைய அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். இது GCC–க்கள், உற்பத்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு கல்வி போன்ற துறைகளில் 1,293 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 820 கோடி ரூபாய் முதலீடு களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முக்கிய துறைகளை உள்ளடக்கிய ஜெர்மனி ஒப்பந்தம்!

இங்கிலாந்து நாட்டு முதலீட்டாளர்கள் சந்திப்புகளுக்கு முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமை யிலான குழு ஜெர்மனியிடமிருந்து 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 7,020 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன்மூலம் 15,320 நபர்களுக்குவேலைவாய்ப்புகள் உரு வாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இவை விண்வெளி, விரிவான தொழில்நுட்பம், ரயில்வே,ஆட்டோமொடிவ் மற்றும் மின்ன ணுவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கியது ஆகும்.

இந்த நிகழ்வின்போது, தொழில், முத லீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பு.உமாநாத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *