மருத்துவக் கல்வித் துறைக்குப் புதிய இயக்குநர்!

1 Min Read

சென்னை, செப்.6- சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் பணியாற்றி வந்த மருத்துவர் சங்குமணி, ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பணியிடத்தில், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியின் தலைவராக பணியாற்றி வந்த மருத்துவர் ஆர்.சுகந்திராஜகுமாரி, பதவி உயர்வு மூலம், சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர் சுகந்திராஜகுமாரி, சென்னை மருத்துவக் கல்லூரியில் தோல் மருத்துவத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். பல்கலை அளவில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்றவர். தான் பிறந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துக் கல்லூரியில் பேராசிரியராகவும், தலைமை இயக்குநராகவும், பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் தலைவராகவும் பணியாற்றினார். இவ்வாறு அரசு முதன்மைச் செயலர் பி.செந்தில் குமார் ெவளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *