சிரஞ்சீவித் தத்துவம் சீரிளமைத் தலைமையால் உலகாளப் போவதற்கான முன்னூட்டத் தடம்! நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் திறக்கப்படுவது
வெறும் பெரியார் படமல்ல!

சென்னை, செப்.6- எவ்வளவு நல்ல தத்துவமானாலும் அதை முன்னெடுக்கும் தலைமை தகுதிவாய்ந்ததாய் அமைந்தால் மட்டுமே அந்தத் தத்துவம் வெற்றி பெறும். அப்படி ஒரு தத்துவத்தையும் தலை மையையும் காலம் பெரியாரின் வடிவத்தில் தமிழர்களுக்கு வழங்கியது.

அந்தக் காலக்கொடையை அதிகாரத்தில் அமர வைத்தார் அண்ணா. அவருக்குப்பின் அந்தத் தத்துவத்தை தளராமல் அரியணையில் அமர வைத்தார் கலைஞர்.

எம்.ஜி.ஆர். என்ற திரைபிம்பத்தை ஏந்தி அந்தத் தத்துவத்தை இன எதிரிகள் சிதைக்க முயன்றபோது ஆட்சிக் கட்டிலை இழந்தும் காவல் அரணாய் காத்துநின்றவர் அவர்.அதிகாரத்திற்கு வந்த போதெல்லாம் தத்துவத்தை அரியணை ஏற்றிய வரும் அவரே.

அவருக்குப்பின் தத்துவம் என்னாகும்? கவலை கொண்ட வர்கள் இருக்கத்தான் செய்தார்கள்; உலகெங்கும் நூறாண் டுகள் ஒரு தத்துவம் கோலோச்சியது இல்லை என்பதால்! கவலை கொண்டவர்கள் இன்று கர்வம் கொள்கிறார்கள்.

தத்துவம் தகுதிமிக்க தலைவனின் குடையின் கீழ் பத்திரமாய் இருப்பதால்! அதற்கு தமிழ் எல்லைக்குள் அண்ணாவால் அரியாசனம்; இந்திய எல்லைக்குள் கலைஞரால் சரியாசனம். முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் மாமனி தரால் அது உலகமயமாகி இன்று உச்சம் தொட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறக்கப்படுவது வெறும் படமல்ல; சிரஞ்சீவித் தத்துவம் சீரிளமைத் தலைமையால் உலகாளப் போவதற்கான  முன்னூட்டத் தடம்!

வாழ்க நீ எம்மான் இவ்வையத்து நாட்டிலெல்லாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *