பெரியார் கல்வி நிறுவன மாணவர்கள் சதுரங்கப் போட்டிகளில் சாதனை

1 Min Read

திருச்சி, செப். 5- திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி, ராக்ஃபோர்ட் செஸ் அகாடமி, ஜே.சி.அய். ராக் டவுன் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்திய, மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் 31.08.2025(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இப் போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, 11ஆம் வகுப்பு மாணவி எஸ்.கீர்த்தனா மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர் இசட்.முகம்மது ரியாஸ் ஆகியோர் மாவட்ட அளவில் ஏழாம் இடம் பிடித்து சாதனை படைத்து, பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

மேலும் 5ஆம் வகுப்பு மாணவர் எஸ்.அர்ஷன் மற்றும் 1ஆம் வகுப்பு மாணவர் எஸ்.ஆத்விக் பிரியன்  ஆகியோர் பங்கேற்புச் சான்றிதழ் பெற்றனர்.

மாணவர்களுக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *