துப்புரவுப் பணியாளரின் நேர்மை பணியிடத்தில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி வெகுமதி வழங்கினார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, செப்.5- பணியிடத்தில் கண்டெ டுத்த தங்கச் சங்கிலியை காவல்துறையிடம் ஒப் படைத்த துப்புரவு பணியாளரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டிய துடன் வெகுமதியும் வழங்கினார்.

தங்கச் சங்கிலி

சென்னை ராயபுரம், காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். பெயிண்டர். ராமச்சந்திர னின் மனைவி கிளாரா, திருவான்மியூர் பகுதி 180ஆவது வார்டில் தூய் மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த இணையருக்கு சூசைமேரி (18), சுவாதி (13), நிக்கிதாசிறீ (10) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். துப்புரவு பணியாளரான கிளாரா திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, மருந்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது கீழே கிடந்த 1 பவுன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்து, காவல் நிலையத்தில் நேற்று (4.9.2025) ஒப்படைத்தார்.

நேர்மைக்கு பாராட்டு

இந்த செய்தியை அறிந்த துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின், துப்புரவுப் பணியாளர் கிளாராவை குடும்பத்துடன் தனது முகாம் அலுவலகத்திற்கு வரவழைத்து அவ ரின் நேர்மையை பாராட்டினார். மேலும் புத்தாடையும், தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் வெகுமதியும் வழங்கி அவரது நேர்மை யான பணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

துப்புரவுப் பணியா ளர் கிளாராவின் குடும்பத்தினருடன் உரையாடிய உதயநிதி ஸ்டாலின், லண்டனில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை அழைத்து, பாராட்டு தெரிவிக்குமாறு தொலைபேசியில் தெரிவித்தார் என்றும், தமிழ்நாடு திரும்பியதும், உங்களை (துப்புரவுப் பணியாளர் கிளாராவை) நேரில் சந்திக்க ஆர்வமாக இருப்பதாகவும்,கிளாரா குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *