பட்டுக்கோட்டை: செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

விழுங்க நினைக்கும் பா.ஜ.க.விடம் அ.தி.மு.க. பலியாகியிருக்கிறது!
திராவிட இயக்கத்தின் வேர்களை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வால் அசைக்க முடியாது!

பட்டுக்கோட்டை, செப்.5 விழுங்க நினைக்கும் பா.ஜ.க. விடம் அ.தி.மு.க. பலியாகியிருக்கிறது! திராவிட இயக்கத்தின் வேர்களை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வால் அசைக்க முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (5.9.2025) பட்டுக்கோட்டைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்!

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

அ.தி.மு.க. என்பது, தி.மு.க.விற்கு எதிரான பலமான எதிர்க்கட்சியாக இருந்தால் சிறப்புதான்.
ஆனால், அந்தக் கட்சியை முழுக்க முழுக்க விழுங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு பா.ஜ.க. வாய்ப் பிளந்தது. அது தெரியாமல், அதற்குப் பலியாகியிருக்கிறார்கள்.

அப்படி பலியான இவர்களைப் பல கூறுகளாகப் பிரித்ததே பா.ஜ.க.தான்! அப்படிப் பிரித்தவர்களை, மீண்டும் ஒன்று சேர்ப்பது போன்ற ஒரு நிலையை உருவாக்குவதும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.தான். எல்லாம் அவர்களுடைய அரசியல் திருவிளையாடல்கள்தான்!
இது எவ்வளவு தூரம் போய், எங்கே நிற்கும் என்று தெரியவில்லை.

மோடியோ, அமித்ஷாவோ திராவிட இயக்கத்தை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று சொல்வது அர்த்தமில்லாதது.
முதலில், கிளைகள்கூட அவர்களிடம் சரியாக இல்லை என்பதை, இப்படிப்பட்ட அறிவிப்புகள் தெளிவாகக் காட்டுகின்றன.
எனவே, அவர்கள் தங்கள் கிளைகளை, இலைகளைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். அவர்களால், வேர்களை அசைத்துப் பார்க்க முடியாது. இதுதான் திராவிட இயக்கத்தின் வரலாறாகும்.

– இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *