பெரியார் கல்வி நிறுவன மாணவர் சிறந்த வீரர் விருதை வென்றார்

0 Min Read

திருச்சி, செப். 4– திருச்சி மாவட்டம் டக்அவுட் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் முத்தரசநல்லூர் கால் பந்தாட்டக் கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டி கடந்த 31.08.2025 அன்று நடைபெற்றது.

இப்போட்டியில், 14 வயதிற்கு உட்பட்டோ ருக்கான பிரிவில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின், கால் பந்தாட்ட அணியினர் கலந்து கொண்டனர்.

இதில், பள்ளியின் 6ஆம் வகுப்பு மாணவர் இ.ராகுல் மிகச் சிறப்பாக விளையாடி “போட்டியின் சிறந்த வீரர்” விருதை வென்றார். சாதனை மாணவனைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *