தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே நாள் தேர்வு, ஒரே நாள் தேர்வு முடிவு அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு

1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஜூன் 1 அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று (31.5.2023) ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்துக்குப் பின் செய்தியா ளர்களிடம் அமைச்சர் கூறிய தாவது: 

அனைத்து பல்கலைக்கழகங் களிலும் பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று அனைத்து துணைவேந்தர் களுக்கும் ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டது. அதற்கேற்ப, மாநில உயர் கல்விக் குழு ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை உருவாக்கி அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பியுள்ளது. இந்த பாடத்திட்டத்தை முழுமை யாகப் பின்பற்றுமாறு துணை வேந்தர்களுக்கு அறிவுரை வழங் கப்பட்டுள்ளது. தற்போது பல்கலைக்கழகங்களில் தேர்வு முடிவுகள் வெவ்வேறு நாள்களில் வெளியிடப்படுகின்றன. இதனால் ஒரு பல்கலைக்கழக மாணவர்கள் இன்னொரு பல்கலைக்கழகத்தில் சேருவதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு, எப்படி 10ஆ-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியிடப்படுகிறதோ அதேபோல், இனிவரும் காலங்களில் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பட்டப் படிப்பு தேர்வு முடிவை ஒரேநாளில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *