தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (31.05.2023) சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில், உலக புகையிலை ஒழிப்பு தினம் 2023 அய் முன்னிட்டு, புகையிலை பயிரிடுவதை கைவிட்டு மாற்று பயிர் தேர்ந்தெடுத்த விவசாயிகளுக்கு மற்றும் பீடி சுருட்டும் தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழில் தேர்ந்தெடுத்த தொழிலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.