மானமிகு சுயமரியாதைக்காரராக மாற சிறு வயதில் கலைஞருக்கு என்ன நேர்ந்தது? என்பதை தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி விளக்கி பேசியது என்னை மிகவும் கவர்ந்தது. கலைஞரின் தந்தை கலைஞரை சிறுவயதில் இசை பயிற்சி பயில கோயிலுக்கு அழைத்து செல்கிறார். மற்றவர்களை அவமானப்படுத்துவதில் சிலருக்கு ஏற்படும் மகிழ்ச்சி, தனது தந்தைக்கு ஏற்பட்ட அவமானம், சமூகப் படிநிலை இவைகள் அவருடைய இசை வகுப்பை அரசியல் வகுப்புக்கு மாற்றியது. மேலாடையை இடுப்பில் அணிந்து, கால்களில் செருப்பு இன்றி செல்லும்போது பெரியார், அண்ணா மட்டுமின்றி திராவிடர் இயக்கமும் ஏன் இன்றும் தேவைப்படுகிறது என்று புரியும். பாதிக்கப்பட்டவன்தான் அதிலிருந்து வெளிவர வலிமையான வழி தேட முடியும். பாதிக்கப்பட்டவன் முற்றிலும் குணமடைய மருத்துவ சிகிச்சையை விட அறுவை சிகிச்சையே சிறந்தது என்று தான் நம்புவதாக பெரியார் கூறுவது உண்டு. எனது அவமானம் : சிலருக்கு மகிழ்ச்சி என்று தனக்கு இழைக்கப்பட்ட கொடிய நோய்க்கு பொருத்தமான அறுவை சிகிச்சையே தன்னுடைய சுயமரியாதை என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றி ஆசிரியர் மேலும் கூறுவதை Periyar Vision OTT இல் இன்றே காணுங்கள்.
– கே.முரளிதரன், அவிநாசி
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com