யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர்கள் நகல் எரிப்புப் போராட்டம்!

1 Min Read

தஞ்சாவூர், செப்.3 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள யுஜிசி பாடத்திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் பெயர்களை மறைத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை இணைத்து இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர்கள் யுஜிசி சட்ட திருத்த மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி கலைக் கல்லூரியில் பயின்று வரும் இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு யுஜிசி சட்ட திருத்த மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

500-க்கும் மேற்பட்டோர்!

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்று யுஜிசி சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *