தஞ்சாவூர், செப்.3 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள யுஜிசி பாடத்திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் பெயர்களை மறைத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை இணைத்து இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர்கள் யுஜிசி சட்ட திருத்த மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி கலைக் கல்லூரியில் பயின்று வரும் இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு யுஜிசி சட்ட திருத்த மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
500-க்கும் மேற்பட்டோர்!
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்று யுஜிசி சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.