பெரிய குளத்தில் இயங்கி வருகின்ற அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் பெரியார் செல்வி பணி நிறைவு பெற்றார். பிரிவு உபச்சார விழா 30.5.2023 அன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பேராசிரியர்கள், மாணவிகள் வாழ்த்துரை வழங்கினர். நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடை பெற்றது. திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன், வாசுகி, சுமதி, சி.காமராஜ் உள்பட பலர் கலந்து வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக பெரியார் செல்வி ஏற்புரையாற்றினார்.