தாய்லாந்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ரூ.2.4 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்!

1 Min Read

தாய்லாந்து, செப்.2- தாய்லாந்தில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற் பட்ட தீவிபத்தில், அந்தக் கடை முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இந்தச் சம்பவத்தில் சுமார் 10 மில்லியன் பாட் (இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ₹2.4 கோடி) மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப் படுகிறது.

தீச்சம்பவம் நடந்தபோது அந்தக் கடையில் சில தையல் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. விசார ணையில், கடையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களில் தீ முதலில் மூண்டதாகவும், பின்னர் முதல் மாடிக்கு பரவியதாகவும் தெரிய வந்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்களில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், கடையின் இருந்த தையல் இயந்திரங்கள், மின்சாதனங்கள், துணி மணிகள் என அனைத்தும் தீயில் கருகின.

கடையின் உரிமை யாளர் இதுகுறித்து கூறு கையில், ஊழியர் ஒருவர் சலவைப் பெட்டியைப் பயன்படுத்திவிட்டு அதை அணைக்க மறந் திருக்கலாம் எனச் சந் தேகிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு அதிகாரிகள் அருகிலிருந்த குடியிருப்பு களில் உள்ளவர்களை வெளி யேறுமாறு அறிவுறுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *