உக்ரைனில் மேனாள் நாடாளுமன்ற தலைவர் கொலை வழக்கில் ஒருவர் கைது

1 Min Read

கீவ், செப். 2- உக்ரைனின் நாடாளு மன்ற மேனாள் தலைவர் அண்ட்ரீ பாருபி (Andriy Parubiy) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) உறுதிப்படுத் தினார்.

உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் லுவீவ் (Lviv) அந்த நாட்டின் நாடாளுமன்ற அவைத்தலைவர் 54 வயதான அண்ட்ரீ பாருபி, ஆகஸ்ட் 30 அன்று சுட்டுக் கொல் லப்பட்டார்  2016 ஏப்ரல் முதல் 2019 ஆகஸ்ட் வரை உக்ரைனின் நாடாளுமன்ற அவைத்தலைவராகப் பதவி வகித்த இவர் தற்போது விவசாயம் தொடர்பான பணிகளைச் செய்துவருகிறார்.

அவைத்தலைவர் கொலை தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் ஸெலென்ஸ்கி கூறுகையில், கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித் துள்ளதாகவும், கொலைக் கான அனைத்து விவரங் களையும் கண்டறியும் வகையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித் தார்.

மேலும் இவரது கொலைக்கும் ரஷ்யா உடனான போருக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.

இந்த அவைத் தலைவர் கொலை தொடர் பான செய்தி நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி யுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *