ஒன்றியந்தோறும் தெருமுனை பரப்புரை, ஊர் தோறும் கிளைக் கழகங்கள்!

1 Min Read

காரைக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு!

அரசியல்

காரைக்குடி, ஜூன் 1 மாவட்ட கழக கலந்துரையாடல்கூட்டம்  29.05.23 திங்கள் பகல் 12 மணி அளவில் காரைக் குடி  குறள் அரங்கில்  மாவட்டத் தலை வர் ச.அரங்கசாமி தலைமையில் நடை பெற்றது. 

தலைமைக் கழக அமைப்பாளர் 

கே. எம். சிகாமணி. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் 

வே. ராஜவேல், மாவட்ட கழக செய லாளர் வைகறை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் கொ. மணிவண்ணன், கழக காப்பாளர் சாமி.திராவிடமணி, கழகப் பேச்சாளர் தி. என்னாரசு பிராட்லா, தேவகோட்டை நகர தலைவர் வீ. முரு கப்பன், மாவட்ட ப.க. தலைவர் சு. முழு மதி, சிவ.தில்லை ராஜா, மாவட்ட அமைப்பாளர் சி. செல்வமணி ஆகி யோர் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்: 

ஈரோடு பொதுக்குழு தீர்மானங் களை செயலாக்கம் செய்வதெனவும், குற்றாலம் பயிற்சி முகாமிற்கு மாணவர் களை அனுப்புவதெனவும், காரைக்குடி மாவட்டத்தில் பயிற்சிப் பட்டறை நடத் துவது எனவும், ஊர்தோறும் கிளைக் கழகங்கள் அமைப்பதெனவும், தெரு முனை பரப்புரைகள் ஒன்றியம் தோறும் நடத்துவததெனவும் தீர்மானிக்கப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *