திராவிட மாடல் அரசின் புதிய சாதனை! 5.13 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 48 லட்சம் டன் நெல் கொள்முதல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, செப். 1- நடப்பு நெல் கொள்முதல் சீசனில், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 5.13 லட்சம் விவசாயிகளிடமிருந்து 47.97 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சாதனையான 44.90 லட்சம் டன்னை விட அதிகம்.

ஒன்றிய அரசின் சார்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இந்த நெல்லை கொள்முதல் செய்து, அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளுக்கு வழங்குகிறது. 2024 செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கிய இந்த நடப்பு கொள்முதல் பருவம் இன்றுடன் நிறைவடைகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்காக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து விவசாயிகளுக்கு ரூ.11,660 கோடி குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கியுள்ளன. இதற்கு முன்பு, 2020-2021 பருவத்தில் 44.90 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதே அதிகபட்ச அளவாக இருந்தது. தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.இன்று (1.9.2025) முதல், புதிய குறைந்தபட்ச ஆதார விலையில் அடுத்த நெல் கொள்முதல் பருவம் தொடங்க உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *