புதுடில்லி, ஆக 31 பீகார் மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 1ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பீகாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட 6.5 மில்லியன் வாக்காளர்களின் பெயர்கள், விடுபட்டதற்கான காரணங்கள் உள்ளிட்டவற்றுடன் இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், பீகாரில் வெளி யிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட அல்லது விடுபட்ட வாக்காளர்கள், தங்கள் ஆதார் எண்ணுடன் இணையதளம் வழியாகவே ஒரு மாதம் வரை மீண்டும் விண்ணப்பிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக மீண்டும் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களைச் சேர்க்கும் பணி நடை பெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த காலக்கெடுவை செப்டம்பர் 1 முதல் 15 வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் மேலும் ஒரு கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை செப். 1-ஆம் தேதி உச்ச நீதிமன்ற அமர்வு நடத்தும் என்று தெரிய வந்துள்ளது.