தலைசிறந்த மனிதநேயம்! மூளைச் செயலிழப்பு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் கொடை 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்

1 Min Read

சென்னை, ஆக.31– விழுப்புரம் மாவட்டம் கட்டன்சிப்புரம், சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த 50 வயது கட்டட தொழிலாளி ஒருவர், கடந்த 25ஆம் தேதி சென்னை கலெக்டர் நகர் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி 28ஆம் தேதி மூளைச் செயலிழப்பு அடைந்தார்.

இந்த நிலையில், அவருடைய உடல் உறுப்புகளை கொடை அளிக்க அவருடைய குடும்பத்தினர் முன்வந்தனர். அவரது உடல் உறுப்புக் கொடையின் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

உறுப்புக் கொடை வழங்கிய தொழிலாளியின் உடலுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கவிதா மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *