சென்னை, ஆக.31– விழுப்புரம் மாவட்டம் கட்டன்சிப்புரம், சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த 50 வயது கட்டட தொழிலாளி ஒருவர், கடந்த 25ஆம் தேதி சென்னை கலெக்டர் நகர் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி 28ஆம் தேதி மூளைச் செயலிழப்பு அடைந்தார்.
இந்த நிலையில், அவருடைய உடல் உறுப்புகளை கொடை அளிக்க அவருடைய குடும்பத்தினர் முன்வந்தனர். அவரது உடல் உறுப்புக் கொடையின் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
உறுப்புக் கொடை வழங்கிய தொழிலாளியின் உடலுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கவிதா மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.