அடுத்தவர் துன்பத்தில் சுகம் காணும் அமெரிக்கா! அமெரிக்காவின் கொடும் வரி விதிப்பால் மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்திக்கும் தோல் தொழிற்சாலைகள் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

1 Min Read

கோவை, ஆக.31– அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி அமலுக்கு வந்தது. அமெரிக்காவிற்கு கோவையில் இருந்து அதிகளவில் தங்க நகைகள், என்ஜினீயரிங் பொருட்கள், ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்திய அளவில் திருப்பூர், கோவையில் இருந்துதான் அமெரிக்காவுக்கு அதிகமான ஏற்றுமதி நடக்கிறது. இதில் ஜவுளி ஏற்றுமதி மட்டும் ஒரு ஆண்டிற்கு 11 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 50 சதவீத வரிவிதிப்பால் இந்த பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூரில் பலர் வேலை இழக்கும் அபாயம் நிலவுகிறது.

கோவையில் 35 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்த தொழில் நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர்கள் தற்போது குறைந்துள்ளன. இது குறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க ஜேம்ஸ் கூறியதாவது:-

தற்போதைய சூழலில் சங்கிலி தொடர் போல் ஒரு நிறுவனத்தை சார்ந்த மற்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஏதாவது ஒரு நிறுவனம் பாதிக்கப்படும்போது அதன் தாக்கம் மற்ற நிறுவனங்களிலும் காணப்படுகிறது.

இந்தியாவில் இருந்து அதிக அளவு அமெரிக்காவிற்கு உதிரி பாகங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ராணுவ தளவாடங்கள் தொடர்பான உதிரி பாகங்களும் கோவையில் தயார் செய்யப்படுகிறது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இதை ஜாப் ஆர்டர்களாக எங்களுக்கு வழங்குகின்றன. வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளதால் எங்களுக்கு வழங்கப்படும் ஜாப் ஆர்டர்களும் குறைந்துள்ளது.

இதனால் கோவையில் உள்ள 35 ஆயிரம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது.

எனவே ஒன்றிய அரசு அமெரிக்காவிடம் இதுகுறித்து உரிய பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *