முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2023), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை

Viduthalai
1 Min Read

அரசியல்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2023), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்  சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது  படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில்   முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஒரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்  அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *