என்று மடியும் இந்த பக்தி மோகம்? திருப்பதி கோயிலுக்குச் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கி பிணமாக கொண்டுவரப்பட்ட அவலம்

1 Min Read

திருப்பத்தூர், ஆக. 29- திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 45). இவரது மனைவி – பவித்ரா (40). இவர்களின் மகள்கள் சவுஜன்யா (7), சவுமியா (4). ராஜேஷ்குமார் தனது குடும்பத்தினருடன் சத்தீஷ்கார் – மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 ஆண்டுகளாக பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் ராஜேஷ்குமாரை அவரது குடும்பத்தினர் திருப்பதி கோவிலுக்கு வருமாறு அழைத்து உள்ளனர். அதன் பேரில் ராஜேஷ்குமார் குடும்பத்தினருடன் காரில் திருப்பதிக்கு புறப்பட்டார். கடந்த 26-ஆம் தேதி அவர்கள் சத்தீஷ்கார் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தில் உள்ள கங்கர் பள்ளத்தாக்கு பகுதியில் வந்தபோது கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் ராஜேஷ்குமார் உள்பட 4 பேரும் காருடன் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் 4 பேரின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று (28.8.2025) மாலை 6 மணி அளவில் பாரண்டப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு உடல்கள் இரங்கல் செலுத்துவதற்காக வைக்கப்பட்டன உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் இரவு 7 மணி அளவில் அவர்களின் உடல் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *