மருத்துவமனைக்கு நேரில் சென்று ‘தகைசால்’ தமிழர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் உடல் நலன் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேட்டறிந்தார்

1 Min Read

சென்னை, ஆக.29 உடல்நலம் குன்றி  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் ‘தகைசால் தமிழர்’ இரா.நல்லகண்ணு அவர்களின் உடல்நலன் குறித்து, நேற்று (28.8.2025) மருத்துவமனைக்கு நேரில் சென்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், நல்லகண்ணு அவர்களின் மகள்கள் ஆகியோரிடம் கேட்டறிந்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தோழர் இரா.நல்லகண்ணு அவர்களுக்குச் சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைப் பற்றிய  விவரங்களை தெரிவித்தனர்.

உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சென்றிருந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *