சென்னை, ஆக.29 உடல்நலம் குன்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் ‘தகைசால் தமிழர்’ இரா.நல்லகண்ணு அவர்களின் உடல்நலன் குறித்து, நேற்று (28.8.2025) மருத்துவமனைக்கு நேரில் சென்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், நல்லகண்ணு அவர்களின் மகள்கள் ஆகியோரிடம் கேட்டறிந்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தோழர் இரா.நல்லகண்ணு அவர்களுக்குச் சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைப் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.
உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சென்றிருந்தனர்.