குரு – சீடன்

1 Min Read

அரசியல்

என்ன காரணம்?

சீடன்: ஒவ்வொரு பண்டிகையும் ஏன் கொண்டாடப்படுகிறது? சங்கட ஹர சதுர்த்தி, பிரதோஷம், ஏகாதசி, ராகுகாலம், எமகண்டம் நேரங்களில் என்னென்ன எல்லாம் செய்யக்கூடாது? உள்ளிட்ட ஆன்மிக செய்திகளை ஒரு தொலைக்காட்சி காலை 6 மணிக்கு எல்லாம் அவிழ்த்துக் கொட்டுகிறதே,  குருஜி?

குரு: ஒரே நாளில் மூன்று ரயில் விபத்துகள் நடந்தன – இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்? பயணம் செய்த அத்தனை பேரும் நல்ல நேரம் பார்த்து காரியங்கள் செய்யாததுதான் காரணமா, சீடா?

***

சொல்லுங்கள் பார்ப்போம்?

சீடன்: செங்கோலை கொடுத்துவிட்டு, டில்லியில் இருந்து சென்னை திரும்பிய திருவாவடுதுறை ஆதினத்திற்கு பூரண கும்ப வரவேற்பு என்று செய்தி வந்துள்ளதே குருஜி.

குரு: திருவாவடுதுறை ஆதினகர்த்தரை காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் சங்கராச்சாரியாருக்கு இணையாக நாற்காலி போட்டு உட்காரச் சொல்லுங்கள், பார்ப்போம் சீடா!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *