தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை: தமிழ்நாடு குழு தகவல்

Viduthalai
1 Min Read

ஒடிசா ரயில் விபத்தில் தற்போது வரை 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தமிழக குழு தகவல் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான கோர மண்டல் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தமிழ்நாடு குழுவில் உள்ள போக்குவரத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வரு கின்றனர். கொல்கத்தா ராணுவ மருத்துவமனையில் தமிழ்நாட்டைச்  சேர்ந்த ஒருவர் சிகிச்சையில் உள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 11 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என தகவல் வெளி யான நிலையில் தமிழ்நாடு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *