‘வைக்கம் விருது’க்கு செப்.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

1 Min Read

சென்னை, ஆக.27– ‘வைக்கம் விருது’க்கான விண்ணப்பங்களை செப்.10ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ‘வைக்கம் விருது’ சமூகநீதி நாளான செப்.17ஆம் தேதி அரசால் வழங்கப்படும்’’ என்று 110-விதியின் கீழ் அறிவித்தார்.

அந்த வகையில் நடப்பாண்டும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் தங்கப் பதக்கம் உள்ளடக்கிய விருது முதலமைச்சரால் வழங்கப்படவிருக்கிறது. இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க விரும்புவோர், மாவட்ட ஆட்சியர் பரிந்துரை மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன், பொதுத்துறை செயலாளரிடம் செப்.10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *