பெரியார் இன்று பேசாச் சிலையோ?

1 Min Read

ஞாயிறு மலர்

சிலையாய் நிற்கும் பெரியார் மண்ணில்

சீறிப் பாயும் சிறுமைப் பூணூல் 

அலையில் துரும்பாய் அமிழ்ந்து புரளும்

அன்பும் பண்பும் ஆரிய அழலே

வலைபடு மீனும் வறுமை போக்கும்

வன்மன பார்ப்பான் வாய்ச்சொல் லேய்க்கும்

சிலைவழி மனுமுறை திராவிட மண்ணை

தின்னும் சிதலும் தெய்வ மாமோ?

இல்லை கடவுள் என்ப துண்மை

இருக்கு மென்பான் இருள்மன ஏய்ப்பான்

கல்வி பறித்த கயவன் யாரே

கனவிலும் வேண்டாக் கழிசடை யவனே

கொல்லிப் பார்வை கொடுமன யாகம்

கோடும் பார்ப்பான் குறுநரி கொடிதே

இல்லை யவனுக் கிங்கே யிடமே

என்றார் எந்தை பெரியா ரன்றே!

பூணூல் அறுக்கும் போரைத் தொடுத்தார்

புத்தர் வழியில் போதனை புரிந்தார்

வீணே தாலி வேண்டா யடிமை

விடுதலைச் சிறகை விரித்திடு என்றார்

நாணம் ஏனோ நால்வகை சாதித்

தடையை உடைத்து வதுவை நடத்து

காணும் கண்ணும் கடனறி நெறியும்

காக்கும் சுயமரி யாதைக் குறியே!

திருச்சி நகரில் தேரெனப் பெரியார்

தென்னவ னாக திருநிழல் சிலையோ

எரிதீக் கனலே எதிர்த்திட யாரே

எங்கும் திராவிட இனத்தின் சுடரே

விரித்திட ஆரிய வலையோ யிங்கே

மிதிபடு வீரே நரிமனத் தோரே

கருமனக் காவி கற்சிலை யாமோ

கருவி யெழுந்திட கைபடு பொடியே!

– பாவலர் சீனி. பழனி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *