வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சு. அரவிந்த் குமார் – மகாலட்சுமி இணையரது திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 வழங்கி, வாழ்த்து பெற்றுக் கொண்டனர். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் அன்புச்செல்வன், இளைஞர் அணித் தலைவர் நா. பார்த்திபன் ஆகியோர் இணையருக்கு ஆசிரியர் மூலமாக நினைவுப் பரிசு வழங்கினர். உடன் சு. செல்வி, பா கீர்த்தனா, ஆ. சு. சூசன். (25.11.2023, பெரியார் திடல்)