கடல்சார் பல்கலை.யில் 5 புதிய பட்டப்படிப்புகள்

1 Min Read

சென்னை, ஜூன் 4 – இந்திய கடல்சார் பல்கலைக்கழ கத்தின் தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி கே.டி. ஜோஷி, நிதி அதிகாரி எம்.சரவணன் ஆகியோர் சென்னையில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

கடல்சார் தொழில் துறையின் தேவையை கருத்தில்கொண்டு இந் திய கடல்சார் பல்கலைக் கழகம் எம்டெக் (மரைன் டெக்னாலஜி, எம்பிஏ (பன்னாட்டு போக்குவ ரத்து மற்றும் தளவாட மேலாண்மை) ஆகிய முதுநிலை படிப்புகளை யும், பிஎஸ்சி (கடல்சார் அறிவியல்), பிபிஏ (தள வாடங்கள் சில்லறை வணிகம் மற்றும் மின்-வணிகம்), பிபிஏ (கடல் சார் தொழில்பயிற்சி) ஆகிய 3 இளநிலை படிப் புகளையும் இந்த ஆண்டு அறிமுகப் படுத்தியுள்ளது.

இப்பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் கடல்சார்துறையில் ஆராய்ச்சியை ஊக்குவிக் கும் வகையில் அமைந்துள் ளன. இப்பல்கலைக்கழகத் தில் மாணவிகளின் எண் ணிக்கை 2014இல் 13 ஆக இருந்தது. தற்போது அது 123 ஆக உயர்ந்து உள்ளது. ஆண்டுதோறும் 50 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் அண்மையில் பிடபிள்யு குளோபல் யுனைடெட் எல்பிஜி என்ற நிறுவனத்துடன் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்யப் பட்டது.

பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பை மேம் படுத்த ஒன்றிய அரசு 2022-2026 காலகட்டத் துக்கு ரூ.200 கோடி வழங்கி யுள்ளது. இதில் புதுமை ஆய்வகம், சிமுலேட்டர் மற்றும் நவீன ஆய்வ கங்கள் அமைக்கப்படும். என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *