“பெரியாரைப் பின்பற்றுங்கள் – அண்ணல் அம்பேத்கர்”

1 Min Read

“பெரியாரைப் பின்பற்றுங்கள் – அண்ணல் அம்பேத்கர்” என்ற பகுதியை, திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசக் கேட்டேன். ‘பதவி ஒன்றே லட்சியம்’ என்ற காலகட்டத்தில் நீதி கட்சியின் தலைவராக சிறையில் இருந்த பெரியாரை வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள செய்தார்கள். பின்னர் அதை அரசியல் பதவிகள் இல்லாத திராவிட கழக இயக்கமாக பெரியார் மாற்றினார். அதை ஏற்றுக் கொள்ளாத சிலர் நீதிக்கட்சியின் சமூகநீதிக் கொள்கைகளையும், சுயமரியாதை இயக்க கொள்கைகளையும் இணைத்து ‘ரிஜிஸ்டர்ட் சுயமரியாதை ஸ்தாபனம்’ என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்கள். அந்தச் சமயத்தில் சென்னை வந்திருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களை அணுகி பெரியாரை மனமாற்றம் செய்ய வற்புறுத்தி கேட்டுக் கொண்டார்கள். புரட்சியாளர் அம்பேத்கர், அவர்களிடம் இறுதியில் என்ன கூறினார் என்பதை Periyar Vision OTTஇல் காண உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

– டி.நீலகண்டன், பரமத்தி வேலூர்

பெரியார் ஒடிடி செய்திகள்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!

இணைப்பு :  periyarvision.com

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *