வன்னிப்பட்டு செ. தமிழ்ச்செல்வன் தந்தையார் செல்லப்பன் மறைவு – இறுதி மரியாதை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வன்னிப்பட்டு, ஆக. 25- நேற்று (24-08-2025) காலை 10 மணிக்கு வன்னிப்பட்டு கிழக்கு  செல்லப்பன் மறைவை ஒட்டி இரங்கல் கூட்டம் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

மறைந்த செல்லப்பன் கழகத்திற்காக சிறை வரை சென்று தன்னுடைய மகன் தமிழ்ச்செல்வனை இயக்கத்திற்கு முழு நேரமாக அர்ப்பணித்தவர். அஞ்சலை அம்மாள், சங்கர், தமிழ்ச்செல்வன், குருமூர்த்தி, குமார் இயக்கத்திற்காக பல்வேறு தியாகங்களை ஏற்று செயல்படுத்திய குடும்பம் என இரங்கல் உரையில் குறிப்பிட்டார்.

மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோபு.பழனிவேல் பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாதுரை, கழக சொற்பொழிவாளர் இரா பெரியார் செல்வன், அரிமா சங்க சாசன தலைவர் ஒரத்தநாடு ராஜ மாணிக்கம், அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில்  தஞ்சாவூர் மிட்ட வுன் ரோட்டரி சங்க தலைவர்  சுரேஷ் ,திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் யாழ்.ஆறுச்சாமி, மேட்டுப்பாளையம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சு. வேலுச்சாமி ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.

பிறகு அவர்களது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு மன்னிப்பு சுடுகாட்டில் உடல் எரியூட்டப்பட்டது.

ஒரத்தநாடு ஹெரிடேஜ் ரோட்டரி சங்க பொறுப் பாளர்கள் உள்ளிட்ட ஏரா ளமான கழகத் தோழர்கள் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறவினர்கள் நண்பர்கள் திர ளாக திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

மறைந்த செல்லப்பனின் கண்கள் தஞ்சை ரோட்டரி சங்கம் மூலமாக கொடை யாக வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *