தீவிர நிலச்சரிவு ஆபத்தில் நீலகிரி 1,000 சதுர கிலோமீட்டர் பகுதிகள் அபாயமிக்கது

1 Min Read

உதக மண்டலம், ஆக. 24- நாடு முழுவதும் உள்ள நிலச்சரிவால் பாதிக்கப் படக்கூடிய பகுதிகள் அனைத்தையும் இந்திய நில அளவையியல் துறை (ஜிஎஸ்அய்) மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. இதனை குறிப்பிட்டு ஒன்றிய புவி அறிவியல் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், நாட்டின் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள மலைப் பகுதிகளின் 4.3 லட்சம் சதுர கிலோமீட்டர் பகுதிகள்  நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் என ஜிஎஸ்அய்  வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 11,000 சதுர கிலோமீட்டர்  பகுதி நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாகும்.  அதில் 8,000 சதுர கிலோமீட்டர் குறைந்த ஆபத்து வகையிலும், 2,000 சதுர கிலோமீட்டர் மிதமான ஆபத்து உள்ள பகுதி என்ற நிலையில், 1,000 சதுர  கிலோமீட்டர் அதிக ஆபத்து வகையில் நிலச்சரிவு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதிக  ஆபத்துள்ள 1,000 சதுர கிலோமீட்டர் பகுதிகள்  அனைத்தும் நீலகிரி மாவட்டம் என குறிப்பிடப் பட்டுள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *