பாசிசப் போக்கு என்றால் என்ன?

2 Min Read

வழக்குரைஞர் அருள்மொழியின் ஆழமான கருத்துகளை பெரியார் காணொலி வலை தளத்தில் காணுகின்ற வாய்ப்பு கிடைத்தது. இந்திய ஒன்றியத்தின் மிகப்பெரிய மாநிலம் பல பிரதமர்களை நாட்டிற்கு அளித்த உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்றும் நிலவி வரும் வர்ணாசிரம கோட்பாடு மற்றும் அதன் மூடப் பின்னணியில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் காட்டுமிராண்டித்தனமான செயல்களை சாமானிய மக்களும் புரிகின்ற வகையில் அவர் கூறியுள்ளார்.

குற்ற மனம், குற்றத்தை செய்கின்ற செயல் ஏனையவற்றை பசு மாடு என்கின்ற கோமாதா மதவெறி கொண்டு சக மனிதர்களை தலைகளாக கட்டி தூக்கில் இடுவது, கொலை செய்யும் முன்பு அவர்களின் பிறப்புறுப்புகளை தீயிட்டு பொசுக்குவது, பெற்றோர்களின் கையிலேயே தூக்கு கயிறு கொடுத்து தூக்கில் இட செய்வது போன்ற வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத கொடூர கொலைகளை மிக சாதாரணமாக செய்து விட்டு, தப்பித்தும் வருகிறார்கள். நீதிமன்றத்தில் மிகப்பெரிய வக்கீல்களை தங்கள் சார்பாக வாதாட மீட்டர் வட்டிக்கு கூட பணம் வாங்கி பீஸ் கொடுத்து வெளியே வந்து விடுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குற்ற செயலுக்கு சாட்சி சொல்ல வந்த நபரிடம் குற்றம் செய்தவர் குற்றம் நடந்த அன்று சிவப்பு சட்டை தானே போட்டிருந்தார் ? போன்ற குழப்ப கூடிய கேள்விகளைக் கேட்டு குற்றவாளிகளுக்கு குஜராத் பேக்கரி மாடல் வழக்கு போன்று நடத்தி விடுதலை பெற்று தருகிறார்கள்.  கூடுதல் விஷயங்களை தெரிந்து கொள்ள Periyar Vision OTT இல் இன்றே பாருங்கள்; பகிருங்கள்

– வி.கோதை ஆண்டாள், சிறீவைகுண்டம்

பெரியார் ஒடிடி செய்திகள்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!

 

இணைப்பு :

periyarvision.com

பெரியார் ஒடிடி செய்திகள்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *