சென்னையில் ஜூலை ஏழாம் தேதி 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

2 Min Read

சென்னை, ஜூன் 5 – சென்னையில் 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7ஆம் தேதி தொடங்கி, 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 200-க்கும் மேற் பட்ட தமிழ் அறிஞர்கள், கவி ஞர்கள், எழுத்தாளர்கள் பங் கேற்கின்றனர்.

இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு.பொன்னவைக்கோ, துணைத் தலைவர் இ.சுந்தர மூர்த்தி, மாநாடு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜி.ஜான் சாமு வேல், பொதுச் செயலாளர் உலகநாயகி பழனி ஆகியோர் சென்னை பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம்  2.6.2023 அன்று கூறியதாவது:

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7 முதல் 9ஆம் தேதி வரை சென்னை அடுத்த செம்மஞ்சேரி யில் உள்ள ஆசியவியல் நிறுவ னத்தில் நடைபெற உள்ளது. 

மாநாட்டை தொடங்கி வைக்க தமிழ்நாடு முதலமைச் சரிடம் அனு மதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்.

உலகமெல்லாம் தமிழோசை பரவ வேண்டும் என்பது இம்மா நாட்டின் மய்யப்பொருள். தமிழ் மொழி, இலக்கியம், தமிழர் பண் பாடு, கலாச்சாரம், நாகரிகம் ஆகியவை குறித்து இளைஞர் களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 

இதில், இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறி ஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர் கள், பதிப்பாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், அகழ்வா ராய்ச்சி நிபுணர்கள் பங்கேற் கின்றனர். 

தமிழின் தொன்மை, தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், சமூகவியல், மொழி பெயர்ப்பியல், மொழியியல் என பல்வேறு தலைப்புகளில் வல்லு நர்கள் உரையாற்ற உள்ளனர். மொத்தம் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக் கப்பட உள்ளன. 

மாநாட்டில் புத்தகக் கண் காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச் சிகள், கலைநிகழ்ச்சிகள் ஆகிய வையும் இடம்பெறுகின்றன. மாநாட்டின் நிறைவு நாளில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற் றப்பட உள்ளன என்று அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *