குறட்டை விட்டதா ரயில்வே துறை?

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிக்னல் பழுது: மூன்று மாதங்களுக்கு முன்பே குறைபாட்டை 

சரி செய்ய வேண்டுகோள் விடுத்த ரயில்வே மண்டல அதிகாரி

புதுடில்லி, ஜூன் 5 மூன்று மாதங்களுக்கு முன்னரே ரயில் வழித்தடப் பகுதிகளில் சிக்னல் அமைப் பிலுள்ள குறைபாடுகள் குறித்து தென்மேற்கு ரயில்வே மண்டல அதிகாரி உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது. 

சுமார் 275 உயிர்களை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்திற்கு காரணம் ‘எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங்கில் மாற்றம்’ காரணம் என்று  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ள நிலையில், தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமை இயக்க மேலாளர் சிக்னல் அமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்னரே தனது உயரதிகாரிகளுக்கு தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் அவர் பிப்ரவரி மாதமே இன்டர்லாக் அமைப்பின் தோல்வி குறித்தும் பாதுகாப்பு நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத் தையும் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், பிப்ரவரி மாத 8 ஆம் தேதி விரைவு ரயில் ஒன்று இம்மாதிரியான சிக்னல் சிக்கலை எதிர்கொண்டது. அப்போதே இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப் பட்டது.

பாதுகாப்பு மேலாண்மை அமைப்பில்- சரியான சிக்னலில் ரயில் துவங்கிய பிறகு, பாதையில் மாற்றம் ஏற்படும் அமைப்பில் ( இன்டர்லாக்கிங்) கடுமையான குறைபாடுகள் இருப்பதை இந்த நிகழ்வு சுட்டிக் காட்டியது. இது இன்டர்லாக்கிங்கின் சாராம்சம் மற்றும் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்று கூறியிருக்கிறார். 

மேலும்,சிக்னல் பராமரிப்பு முறையை உடன டியாக கண்காணித்து சரி செய்யாவிட்டால், அது கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும் என் றும் அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து விளக்க மளித்துள்ள தெற்கு ரயில்வே, “அச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சிக்னல் கியர் பழுது/பராமரிப்புப் பணியில் ஈடுபடும்போது, ​​முறையான நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. உடனடியாக, நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி, தவறு செய்த ஊழியர்கள் மீது கடுமையான தண்டனையை வழங்கியது. ஒழுக்கம் மற்றும் மேல்முறையீட்டு விதிகளின்படி கொடுக்கப்பட் டுள்ளது” என்று கூறியுள்ளது. 

சிக்னல் குறைபாடுகள் குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் முன்னரே எச்சரித்தும் ஒன்றிய அரசின் அலட்சியத்தால்தான் இந்தப் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது, இண்டர்லாக் சிஸ்டத்தில் பிரச்சினை என்று ரயில்வே அமைச்சர் விபத்து குறித்து காரணமாக கூறியிருந்தார்; தற்போது அரசின் அலட்சியமே காரணம் என்று தெரியவந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *