சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்

1 Min Read

திருவில்லிபுத்தூர், ஆக. 22– 17.8.2025அன்று திருவில்லிபுத்தூர் நகரில் சுயமரியாதை  இயக்க நூற்றாண்டு நிறைவுவிழா மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம் காமராசர் சிலை அருகில் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பழக்கடை இரா. கோவிந்தன் தலைமை தாங்கினார்.

தலைமைச் செயற்குழுஉறுப்பினர் இல. திருப்பதி தொடக்கவுரையாற்றினார்.

மாவட்டத்தலைவர் பூ. சிவகுமாரின் ‘மந்திரமா… தந்திரமா’ அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ச்சியாக கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை பெரியார்செல்வன் மாநாட்டை விளக்கி சிறப்பானதொரு உரையாற்றினார். ஏராளமான பொதுமக்கள் நிகழ்வைக் கண்டு தெளிவு பெற்றனர்.

மாவட்டத் துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் இரா.பாண்டிமுருகன், விருதுநகர் மாவட்டத் தலைவர் நல்லதம்பி, சிவகாசி நகரத்தலைவர்  நரசிம்மராஜ் உள்ளிட்ட கழகத்தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஒன்றிய அமைப்பாளர் போத்திராஜ் நன்றியுரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *