விஜய்க்கு தி.மு.க. மாணவர் அணி கேள்வி தொண்டனை சித்ரவதைப்படுத்தி கேரவனுக்குள் ஒளிந்து கொள்வதா?

1 Min Read

சென்னை, ஆக.22- திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

சேலத்தில் 5 லட்சம் இளைஞர்களைக் கூட்டி 12 ஏக்கருக்கு பந்தல் போட்டு, அரசியல் அறிஞர்களைப் பேச வைத்து, மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பேசினாலும், அதுவரை தொண்டர்களை நிழலில் அமர வைத்து குடிக்கத் தண்ணீரும், தேநீரும், உண்ண சைவ, அசைவ உண வும் கொடுத்து நிழற்படத்தில் கூட்டம் தெரியவில்லை என்றாலும், வந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாநாடு நடத்தியவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

வந்த தொண்டர்களுக்குத் தண்ணீர் கொடுக்காது,

இளைப்பாறக் கூடாரம் போடாது,

தடுப்பு வேலியில் க்ரீஸ் தடவி,

சாமானிய தொண்டனைச் சித்ரவ தைப்படுத்தி,

மாற்று அரசியலை தருகிறேன் என கேரவனுக்குள் ஒளிந்துகொண்டு படம் காட்டுகிறார் நடிகர் விஜய்.

தடுப்புகளில் க்ரீஸ் தடவும் நீங்கள், திரையரங்கு  இருக்கைகளிலும் அன்று க்ரீஸ் தடவி இருந்தால், இந்த ரசிகர்கள் கூட்டம் உங்களின் கோர முகத்தை அப்போதே புரிந்துகொண்டிருக்கும்.

இவ்வாறு அந்தப் பதிவில் கூறப் பட்டுள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *