முற்றுப் பெறாமல் நீடிக்கும் வடகலை– தென்கலை சண்டை உயர் நீதிமன்றம் கருத்து

1 Min Read

சென்னை, ஆக.22- காஞ்சிபுரம் தேவராஜ சாமி கோவிலில் உள்ள குலசேகரப்படியில் பொருத்துவதற்காக விஸ்வநாத் என்பவர் வெள்ளிக்கவசத்தைக் கொடையாக வழங்கினார். சங்கு சக்கரத்திற்கு நடுவில் ஆதிசேஷனுடன் பொறிக்கப்பட்டிருந்த இந்தக் கவசத்தின் நடுவில் வடகலை நாமத்தைப் பொறிக்க உத்தரவிட வேண்டும் என வடகலை சிறீ வைஷ்ணவ சம்பிரதாய சபை சார்பில் இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு கொடுக்கப்பட்டது. இதை அறநிலையத்துறை ஏற்க மறுத்து உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘‘தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்க அறநிலையத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. அதனால், அறநிலையத்துறை  உத்தரவில் தலையிட முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர வேண்டும். அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். மேலும், வைணவ சமயத்தில் வடகலை, தென்கலை மோதல் விவகாரம் கவனமுடன் கையாள வேண்டிய தீவிரமான பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் பெறாமல் நீடிக்கும் பிரச்சினையாக இருக்கிறது’’ என்று உத்தரவிட்டார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *