சென்னை, ஆக.21 போலியாக கையெழுத்திட்டு அமெரிக்கவாழ் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.8 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக வங்கி அதிகாரி. ஊழியர்கள் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியர் வங்கி கணக்கு
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அர்ஜுன் பாண்டியன். இவர் சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், “எனது உறவினர் தீனதயாளன் தினகர் பாண்டியன் அவரது மனைவி சித்ராவுடன் அமெரிக்காவில் பணி யாற்றிஅங்கேயே வசித்து வருகிறார்.அவர்கள் சென்னை அண்ணா நகரில் உள்ள வங்கிக் கிளை ஒன்றில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான 3 வங்கிக் கணக்குகளைத் தொடங்கி பராமரித்து வருகின்றனர்.
அவர்களுடைய இந்த வங்கிக் கணக்குகளிலிருந்து 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் அவர்களின் அனுமதியில்லாமல் காசோலை மற்றும் ரசீதுகளில் வங்கி அலுவலர்கள் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வேணுகோபால். குலோத்துங்கன், தனசேகரன் போலியாக கையொப்பமிட்டு வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 கோடியே 43 லட்சத்து 25 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
ரூ.8 கோடி மோசடி
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா மேற்பார்வை யில் வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அமெரிக்காவில் வசிக்கும் தீனதயாளன், சித்ரா இணையர் வங்கிக் காசோலையில் போலியாக கையொப்பமிட்டு,வங்கி அலுவர்களால் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு பண மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியின் துணை மேலாளர் அமைந்தகரையைச் சேர்ந்த வேணுகோபால் (50). காசாளர்கள் கொரட்டூரைச் சேர்ந்த குலோத்துங்கன் (49), தனசேகரன் (41) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் இதே பாணியில் பல வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பணம் ரூ.8 கோடிக்கு மேல் ஏமாற்றியது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.