தமிழ்நாட்டில் முதல்முறையாக வெளிமாநிலத் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஆக.21 நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெளி மாநிலங்களில் இருந்து வேலை தேடி வரும் பல தொழிலாளிகள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் தோராய எண்ணிக்கை தற்போது வரை 35 லட்சம் பேர் வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் எவ்வளவு பேர் என கணக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கோரி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாடு வந்ததற்கான காரணம், எங்கு வேலை செய்கிறார்கள், வாழ்க்கை நிலை, சுகாதார நிலை உள்ளிட்டவற்றை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *