போலந்தில் வானிலிருந்து விழுந்த விந்தைப் பொருள் ‘பறக்கும் தட்டு’ என பரவிய வதந்தி அதிகாரிகள் விசாரணை

1 Min Read

வார்சா, ஆக. 21- போலந்து நாட்டின் ஒசினி கிராமத்தில் வானில் பறந்து வந்த விந்தைப் பொருள் ஒன்று திடீரெனத் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் ‘அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு’ என வதந்திகள் பரவின.

ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன

நேற்று (20.8.2025) அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெடிப்பின் காரணமாக அருகிலிருந்த சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், தீயில் கருகிய நிலையில் இருந்த உலோகம் மற்றும் பிளாஸ்டிக் துண்டுகளைக் கைப்பற்றினர்.

இணையத்தில் பரவிய வதந்திகளுக்குப் பதிலளித்த அதிகாரிகள், வெடித்துச் சிதறிய விந்தைப் பொருள் ஒரு ட்ரோனாக இருக்கலாம் எனத் தெரிவித்தனர். அருகிலுள்ள உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளின் ட்ரோன்கள் போலந்து வான்வெளியில் அத்துமீறி நுழையவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வெடித்துச் சிதறியது ராணுவ ட்ரோனா அல்லது கடத்தல்காரர்கள் பயன்படுத்திய ட்ரோனா என்பதை அறிய முயற்சிப்பதாகவும் போலந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *