தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்

1 Min Read

ஓசூர், ஆக.21- ஓசூரில் அறிவியல் அறிஞர் மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி பேராசிரியர்  நரேந்தர் தபோல்கர் நினைவு நாளில் “ஆக்ஸ்ட்  20 தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்” மற்றும் இந்திய அரசியலமைப்பின் 51 A (h) பிரிவு – ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை, மனித நேயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறது.

அதன் அடிப்படையில் உறுதி ஏற்பு நிகழ்வு ஒசூர் ராமநாயக்கன் ஏரி மாநகராட்சி பூங்கா அருகில் ஒசூர் புத்தக திருவிழா தலைவர் ஆடிட்டர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் மாவட்ட துணைச் செயலாளர் ச.எழிலன், இளைஞரணி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்து நடத்தியது. மேலும் கலந்கொண்ட அமைப்புகள் ஒசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்களின் கூட்டமைப்பு.

பகுத்தறிவாளர் கழகம்

திராவிடர் கழகம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,

தமிழ்நாடு கல்வி இயக்கம்

சமூக விஞ்ஞான ஆய்வரங்கம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட குடியிருப்போர் நலச்சங்கம்

இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம்.ஆகிய அமைப்புக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *