அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டி.காம். படிப்புக்கு ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்

1 Min Read

 சென்னை,ஜூன்6 – அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வணிகவியல் பட்டயப் படிப்பில் (டி.காம்.) சேருவதற்கு வரும் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மெக்கானிக்கல், சிவில் உள்பட பல்வேறு விதமான பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை, மதுரை, கோவை, நீலகிரி, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டி.காம். எனும் வணிகவியல் பட்டயப் படிப்பு  பயிற்றுவிக்கப்படுகிறது.

டி.காம். படிப்பு பி.காம். பாடத் திட்டத்தை ஒத்திருப்பதுடன், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினிப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. அதேபோன்று டி.காம். சான்றிதழ் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் கணக்கியல், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசுத் தேர்வுகளுக்கு இணையானதாகவும் கருதப்படும். இதுதவிர டி.காம். நிறைவு செய்த மாணவர்கள், பி.காம். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம். இதற்காக அனைத்துக் கல்லூரிகளிலும் பி.காம். நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு கூடுதலாக 10 சதவீத இடங்கள் ஏற்படுத்திக் கொள்ள உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, டி.காம். படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. முதலாமாண்டு சேர்க்கை பெற பத்தாம் வகுப்பிலும், நேரடி இரண்டாம் ஆண்டில் சேர பிளஸ் 2 வணிகவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள்  இணையதளம் வழியாக ஜூன் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வசதி இல்லாத மாணவர் கள் அருகே உள்ள சேவை மய்யங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவ ரங்களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *