அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச்சூடு: வர்ஜீனியாவில் இருவர் உயிரிழப்பு

1 Min Read

வாஷிங்டன், ஆக.20- அமெரிக்காவின் தென் மேற்கு வர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்தனர். இரண்டு நாட்களுக்குள் அமெரிக்காவில் நடந்த இரண்டாவது துப்பாக்கிச்சூடு இது.

சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய தாக சந்தேகிக்கப்படும் நபர், தனது வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் கண்ட ெடுக்கப்பட்டுள்ளார். மற் றொருவர், அருகில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் இறந்து கிடந்துள்ளார். துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காயங்களுடன் மீட்கப்பட்ட மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களின் அடை யாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

கடந்த இரண்டு நாட் களுக்கு முன்பு, வடக்கு உட்டா நகரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்தத் துப்பாக் கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *