நீலமலை, ஆக. 20– நீலமலை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 17-08- 2025 காலை 11 மணி அளவில் குன்னூர் மருத்துவர் கவுதமன் இல்லத்தில் நடைபெற்றது.
பெரியார் மருத்துவ குழுமத்தலைவர் நீலமலை மாவட்ட காப்பாளர் மருத்துவர் இரா.கவுத மன் தலைமையேற்று உரை யாற்றினார் நீலமலை மாவட்ட செயலாளர் ஜீவா முன்னிலை ஏற்று உரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித்தும் பெரியார் உலகம் நிதி திரட்டுதல் அவசியம், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்கிட வேண்டும் செங்கல்பட்டு மறைமலைநகரில் நடை பெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற் பதன் அவசியம் இளை ஞரணி சார்பில் துண் டறிக்கை விநியோகம் பெரியார் சமூக காப்பு அணியில் இளைஞர்கள் மாணவர்களை அதிகம் பங்கேற்கச் செய்வது ஆசிரியர் அவர்களின் அளப்பரிய உழைப்பால் கிடைத்திட்ட பலன்கள் குறித்து உரையாற்றினார்
பொதுக்குழு உறுப் பினர் ராவணன், மாவட்டத் துணைத் தலைவர் சத்யேந்திரன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்குமார், மூர்த்தி, வாசு உள்ளிட்ட தோழர்கள் பங் கேற்று உரையாற்றினர்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
கோவை கு.வெ.கி.செந்தில் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது
மாவட்டத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை சேர்க்கும் பணியில் கழக தோழர்கள் அனை வரும் இணைந்து பணி யாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.
“உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட கழகத்தின் சார்பில் நிதி திரட்டி ரூ.10 லட்சம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதியின் சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
செப்டம்பர் 6, 7 கோபி செட்டிபாளையத்தில் நடைபெறும் பெரியார் சமூக காப்பு அணி பயிற்சியில் மாவட்டத்தி லிருந்து இளைஞர்கள் மாணவர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.