தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது; செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது!

3 Min Read

பட்டுக்கோட்டை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

பட்டுக்கோட்டை, ஆக.20 பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நேற்று (19.8.2025) மாலை 6:30 மணி அளவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் க.அண்ணாதுரை அலுவலகத்தில் நடைபெற்றது.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித்தும், பெரியார் உலகம் நிதி திரட்டுதல் அவசியம், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது, ‘விடுதலை’ சந்தாக்களை புதுப்பித்து வழங்கிட வேண்டும், செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாத இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன்  பங்கேற்பதின் அவசியம், பெரியார் சமூக காப்பு அணியில் இளைஞர்கள் மாணவர்களை அதிகம் பங்கேற்கச் செய்வது, ஆசிரியர் அவர்களின் அளப்பரிய உழைப்பால் கிடைத்திட்ட பலன்கள் குரித்து கூட்டத்திற்குத் தலைமை ஏற்று உரையாற்றினார்

மாவட்டத் தலைவர் பெ.வீரையன், மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், மாவட்ட காப்பாளர் அரு.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்

பொதுக்குழு உறுப்பினர் இரா. நீலகண்டன், மாவட்டதுணை தலைவர்  முத்து.துரைராசு, மாவட்ட ப.க தலைவர் ரெத்தினசபாபதி, மாவட்ட ப.க.  செயலாளர் புலவஞ்சி காமராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் அரவிந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வசி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் ஜெகநாதன், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி ரங்கசாமி, மதுக்கூர் என்.கே. ஆர்.நாராயணன், பேராவூரணி கனக. ராமச்சந்திரன் மதுக்கூர் ஒன்றிய ப.க தலைவர் சிவஞானம், மதுக்கூர் ஒன்றிய ப.க. செயலாளர் முருகேசன் மதுக்கூர் பாலா, அத்திவெட்டி வீரவேல்,சேதுபாவா சத்திரம் ஒன்றிய செயலாளர் சண்முகவேல், பள்ளத்தூர் ஆத்மநாதன், பட்டுக்கோட்டை குமரவேல் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

மதுக்கூர் ஒன்றிய தலைவர் புல வஞ்சி அண்ணாதுரை நன்றி கூறினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத்தில் முடிவுற்ற ‘விடுதலை’ சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை சேர்க்கும் பணியில் கழக தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.

‘‘உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம்’’ என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று  மாவட்ட  கழகத்தின் சார்பில் நிதித் திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

அறிவுலக  ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவினை ( செப் – 17 சமூகநீதி நாள்) மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில்,  கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்து வைத்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திராவிடர்களின் திருநாளாக கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.

2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் மற்றும் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை விளக்கி நகரமெங்கும் மற்றும் புறவழிச்சாலை நெடுகிலும் சுவரெழுத்து மற்றும் சுவரொட்டி பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் தலைமைக்கழகம் அவ்வப்போது அறிவிக்கும் பணிகளையும் மாவட்டத்தில் பரவலாக பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைக்கவும் பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர் வழிகாட்டுதலோடு பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா. நீலகண்டன் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்படுகிறது

புதிய பொறுப்பாளர் 

மதுக்கூர் கழக  நகரச் செயலாளராக மதுக்கூர் பாலா  அறிவிக்கப்படுகிறார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *