திருச்சி, ஆக. 20- திருச்சி, புனித வளனார் கல்லூரியில் 10.08.2025 அன்று, தேசியப் பள்ளி கள் கூட்டமைப்பு, பள்ளி களுக்கான தற்காப்புக்கலை விளையாட்டுக் கூட்ட மைப்பு, இளைஞர் தற்காப்புக் கலை விளை யாட்டுக் கூட்டமைப்பு, உலக சார்பட்டா சிலம்பக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது
இந்தப் போட்டியில் நாடு முழுவதிலிருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அய்நூறுக்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவர்கள் பங் கேற்று தங்கள் சிலம் பத் திறமைகளை வெளிப் படுத்தினர்.
இதில், பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று, சுருள்வாள் போட்டியில் 12ஆம் வகுப்பு மாணவர் எஸ் தேவராஜ் முதல் இடத்தோடு தங்கப் பதக்கமும், ஒற்றைக் கம்புப் போட்டியில் 6ஆம் வகுப்பு மாணவர் வி.அஷ்வர்த் முதல் இடத்தோடு தங்கப் பதக்கமும் வென்று தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளனர்.
மாணவர்களின் இந்த வெற்றிக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.